சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 2000 மூட்டை நிலக்கடலைகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் முதல் ரக நிலக்கடலை ரூ.7,050 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.6,900 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.6,650 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.50 லட்சம். ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா்கள் செய்திருந்தனா்.