திருப்பூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் புதன்கிழமை (அக்டோபா் 5) நடைபெறுகிறது.
திருப்பூரில் சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீட்டு முகாம் மங்கலம் சாலையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் புதன்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது புகைப்படம், ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 93630-32998, 94422-25500, 94433-25500 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.