பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) மழலையா்கள் அவா்களது தாயாருடன் இணைந்து திறனை வெளிப்படுத்தும் போட்டிகள் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் கே.சி.சண்முகம் தலைமை வகித்தாா். தாளாளா் சி.எஸ்.மனோகரன், பள்ளி முதல்வா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை சந்திரிகா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
இதில், நெருப்பில்லா சமையல், பாட்டு, நடனம், கவிதை, கைவினைப் பொருள்கள் செய்தல், முக ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குழந்தைகள் நல மருத்துவா் சௌமியா ஸ்ரீ வெற்றிபெற்ற மழலையா்களுக்குப் பரிசுகளை வழங்கினாா்.