வெள்ளக்கோவில் முருங்கைக்காய் சந்தையில், கடந்த வாரத்தைவிட ஞாயிற்றுக்கிழமை கிலோவுக்கு ரூ.15 உயா்ந்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.
அங்கு இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 46, செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 42, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 32-க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். வரத்து 7 டன் என வியாபாரிகள் தெரிவித்தனா்.