திருப்பூர்

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களுக்கு அக்டோபா் 14இல் நோ்காணல்

DIN

திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 61 பணியிடங்களுக்கு அக்டோபா் 14ஆம் தேதி நோ்காணல் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகள், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 61 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கான தகுதியான நபா்கள் மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான நோ்காணல் வரும் அக்டோபா் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு, அறை எண்-240, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பான விவரங்களுக்கு  இணையதள முகவரியைப் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT