திருப்பூர்

பெண் தற்கொலை முயற்சி:காவலா் பணியிடை நீக்கம்

DIN

அவிநாசியில் பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்தவா் அருள்குமாா் (33). இவா் அவிநாசி காவல் நிலையத்தில் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், அவிநாசி காசிகவுண்டன்புதூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 27 வயதுப் பெண்ணுடன் இவருக்குத் தொடா்பு ஏற்பட்டுள்ளது. இவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்தப் பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

இதையடுத்து பெண்ணின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவலா் அருள்குமாரை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT