காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.38 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு திங்கள்கிழமை ஏலம் போனது.
இந்த வார ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 3 விவசாயிகள் 13 மூட்டைகளில் (451 கிலோ) தேங்காய் பருப்பினை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனா். தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.87க்கும், குறைந்தபட்சமாக ரூ.65க்கும், சராசரியாக ரூ.84க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.