காங்கயம் காவல் நிலையத்தில் போலீஸாா் அனைவரும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
ஆண்டு தோறும் நவம்பா் 26 ஆம் நாள் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவோம் என அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்வது வழக்கம். அதன்படி காங்கயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காங்கயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாா் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.