திருப்பூர்

மூலனூரில் பாஜகவினா் விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கிராமப்புறங்களில் மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பாஜக சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் கொடியேற்று விழா மூலனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா் தலைமை வகித்தாா். மூலனூா் தெற்கு ஒன்றியத் தலைவா் செல்வேந்திரன் முன்னிலை வகித்தாா். திருப்பூா் தெற்கு மாவட்டத் தலைவா் மங்களம் ரவி கட்சிக் கொடியேற்றினாா்.

இதில், மத்திய அரசு மூலம் கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மூலனூா் தெற்கு ஒன்றியம், கிழங்குடல் ஊராட்சிக்கு உள்பட்ட எடைக்கல்பாடி கிராமத்தில் தொடங்கி சுமாா் 25 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதில், பாஜக திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள், மூலனூா் தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT