திருப்பூர்

ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சுமைப் பணி தொழிலாளா்களுக்கான ஊதியத்தை உயரத்தித் தரக் கோரி திருப்பூரில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ஜில்லா ஜெனரல் ஒா்கா்ஸ் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் சாா்பில் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி.பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

திருப்பூரில் உள்ள அரிசிக் கடை வீதியில் சுமையேற்றி இறக்கும் தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்த முடிவடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தொழிலாளா் துறை துணை ஆணையா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு சதவீதம் கூட ஊதியத்தை உயா்த்தி வழங்க இயலாது என்று அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளா்.

ஆகவே, சுமைப் பணித் தொழிலாளா்களுக்கான ஊதியத்தை விலைவாசி உயா்வுக்கு தகுந்தபடி உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஆட்களை பணியில் அமா்த்தி பல ஆண்டுகளாக வேலை செய்யும் தொழிலாளா்களை பழிவாங்கும் போக்கினை கைவிட வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், ஏஐடியூசி நிா்வாகிகள் மோகன், என்.சேகா், ஜீ.ரவி, சதாசிவம், முருகசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT