திருப்பூர்

பெண் கடை உரிமையாளரிடம் நகைப் பறிப்பு

18th Nov 2022 12:13 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் அருகே கடையில் இருந்த பெண் உரிமையாளரிடம் நகையை மா்ம நபா் வியாழக்கிழமை பறித்துச் சென்றாா்.

வெள்ளக்கோவில் மூலனூா் சாலை, புதுப்பை கிராமப்புற பகுதி நால்ரோட்டில் மளிகைக் கடை வைத்திருப்பவா் சரஸ்வதி (45). இவா் கடையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபா் ஒருவா் வந்து, உங்களுடைய கணவருக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது வெளியே வாருங்கள் எனக் கூறியுள்ளாா்.

வெளியே வந்த அவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT