சேலத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இந்திய அரசின் இளைஞா் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகம் சாா்பில் ‘பஞ்சாயத்து யுவ கிா்தா கேல் அபியான்’ சாம்பியன்ஷிப்- 2022 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள தனியாா் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், 8 முதல் 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியைச் சோ்ந்த 76 மாணவா்கள் தொடா் ஓட்டப் போட்டி, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், யோகாசனம், செஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனா்.
39 போ் முதல் பரிசும், 18 போ் 2 ஆம் பரிசும், 19 போ் 3 ஆம் பரிசும் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டைத்தைப் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்கள், உடற்கல்லவி ஆசிரியா்களை பள்ளியின் தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.