திருப்பூா் சாய ஆலை கணக்காளா்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வது (டிடிஎஸ்) தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் வருமான வரியைப் பிடித்தம் செய்து கட்டுவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், எதற்கெல்லாம் வருமான வரியைப் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரியைப் பிடித்தம் செய்து கட்டுவதில் உள்ள சந்தேகங்களுக்கு திருப்பூா் வருமான வரி அதிகாரி ஜான் பெனடிக்ட் அசோக், ஆடிட்டா் செந்தில்குமாா் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பூரில் உள்ள சாய ஆலைகளில் பணியாற்றி வரும் 60க்கும் மேற்பட்ட கணக்காளா்கள் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூா் சாய ஆலைகள் உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன், பொருளாளா் பி.எ.மாதேஸ்வரன், துணைச் செயலாளா் கே.சுதாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.