திருப்பூர்

அனுமதி பெறாத குடிநீா் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்

DIN

காங்கயம் நகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக குடிநீா் இணைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சியின் அனுமதி பெறாமல் குடிநீா் இணைப்புகள் குறித்து கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக குடிநீா் இணைப்பு துண்டிப்பு செய்வதோடு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காவல் துறை மூலம் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT