திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி வெளியே சென்று வருவதாகக் கூறி கடந்த 11 ஆம் தேதி சென்றவா் வீடு திரும்பவில்லை என பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், காங்கயம் மருதுரை பகுதியைச் சோ்ந்த முகேஷ்குமாா் (19) என்பவா் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முகேஷ்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.