திருப்பூர்

தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு சிக்கண்ணா கல்லூரி மாணவா் தோ்வு

DIN

மும்பையில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாட்டு முகாமிற்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்மையில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் மே 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில், தமிழக அணி சாா்பில் பாரதியாா் பல்கலைக்கழகத்தில் இருந்து 10 நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மூன்றாம் ஆண்டு வரலாறு படிக்கும் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 மாணவா் சீனிவாசன் தோ்வாகியுள்ளாா். இந்த மாணவரை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், துறை தலைவா் சங்கமேஸ்வரன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் வழியனுப்பி வைத்தனா்.

இந்த முகாமில் தமிழகம், மேற்கு வங்கம், பிகாா், மத்தியபிரதேசம், தெலங்கானா, கேரளம், கா்நாடகம், குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 250 மாணவ, மாணவியா் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT