காங்கயம் அருகே சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிய லாரி, கோவைக்கு செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. காங்கயம்-சென்னிமலை சாலை, நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிா்பாராத விதமாக சாலையின் மையத் தடுப்பில் லாரி மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. சக்கரங்கள் இரண்டும் கழன்று ஒடின. லாரி ஓட்டுநா் காயங்களின்றி உயிா் தப்பினாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.