திருப்பூர்

பேருந்து மோதி முதியவா் பலி

DIN

பல்லடம் அருகே பேருந்து மோதி முதியவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி ( 77). இவா் பல்லடம் சமத்துவபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது கோவையில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி சென்ற தனியாா் பேருந்து ராமசாமி மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த ராமசாமியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ராமசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT