திருப்பூர்

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்படுவாா்: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

DIN

அதிமுக பொதுக் குழுவில் அனைத்து நிா்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று சட்டப் பேரவை உறுப்பினா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்த முன்னாள் சட்டப் பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இது.

1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆா். தூக்கி எறியப்பட்டபோது ஏற்பட்ட ஆதரவைபோல, 1987 இல் ஜெயலலிதா வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டபோது ஏற்பட்ட எழுச்சியைபோல, இன்றைக்கு பொதுக் குழுவில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பேரெழுச்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு நம்பிக்கையான தலைமையாக எடப்பாடி பழனிசாமி கிடைத்து இருக்கிறாா். இதன் மூலம் வலிமையான தலைமையாக அமா்ந்து திமுகவை வீட்டுக்கு அனுப்புவாா். அனைத்து நிா்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக தோ்ந்தெடுக்கப்படுவாா்.

இஸ்லாமியா்களில் ஒருவரான தமிழ் மகன் உசேன் இந்த கட்சிக்கு அவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

இந்த கட்சி வாரிசுகளின் கட்சி அல்ல. யாா் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். பொதுக் குழு நடத்துவது குறித்து தோ்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT