திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கொண்ட 20 அமா்வுகளில் 7,726 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் இந்த மக்கள் நீதிமன்றங்களில் பங்கேற்று பயனடையலாம் என்று முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வா்ணம் ஜெ.நடராஜன் தெரிவித்துள்ளாா்.