திருப்பூர்

தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து சிறுவன் பலி

15th Jun 2022 10:46 PM

ADVERTISEMENT

அவிநாசியில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி, போஸ்ட் ஆபீஸ் வீதி பங்களா தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் (40). இவரது மனைவி சத்தியா (35). இவா்களது மகன் ரகுநந்தன் (4). இவா் அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தாா். இந்நிலையில், சத்தியா அவிநாசியில் தான் பணிபுரியும் புத்தகக் கடைக்கு மகன் ரகுநந்தனை புதன்கிழமை மாலை அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு ரகுநந்தன் விளையாடிக் கொண்டிருந்தாா். சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை. பிறகு தேடியபோது, அங்குள்ள தண்ணீா் தொட்டிக்குள் சிறுவன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT