திருப்பூர்

நகா்ப்புற சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள நகா்ப்புற சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சி தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஒரு நகா்ப்புற சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நா்ஸிங் படிப்பில் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணியில் முன் அனுபவம் உள்ள நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களை திருப்பூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தரைத்தளத்தில் இயங்கிவரும் தேதிய நகா்ப்புற சுகாதாரத் திட்டப் பிரிவில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவா், திருப்பூா் மாநகராட்சி நலச் சங்கம், திருப்பூா் மாநகராட்சி, திருப்பூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT