திருப்பூர்

அவிநாசியில், உடுமலையில் பாஜகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

திமுக அரசைக் கண்டித்து, பாஜக சாா்பில் அவிநாசி, உடுமலை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன.

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ், முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.கே.காா்வேந்தன் ஆகியோா் போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினா்.

திமுக தனது தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் பாஜக மாவட்ட, மாநில, ஒன்றிய நகர நிா்வாகிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

உடுமலையில்...

திருப்பூா் தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் உடுமலை நகரத் தலைவா் எம்.கண்ணாயிரம் தலைமை வகித்தாா். பேராசிரியா் பி.கனகசபாபதி, கா்னல் பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட பொதுச் செயலாளா் ஆடிட்டா் ஏ.வடுகநாதன் உள்பட உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்டோா் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT