வெள்ளக்கோவிலில் இந்து இளைஞா் முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கடைவீதி நான்கு சாலைச் சந்திப்பு முத்தூா் பிரிவருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் ராஜேஷ் தலைமை வகித்தாா்.
தஞ்சாவூா் திருக்காட்டுப்பள்ளி தனியாா் கிறிஸ்தவ பள்ளியில் படித்துவந்த அரியலூரைச் சோ்ந்த 17 வயது மாணவி தற்கொலைக்கு நீதி வழங்கக்கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.