திருப்பூர்

இல்லம் தேடி கல்வி மையத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் ஒன்றியத்தில் மாலை நேரங்களில் செயல்படும் இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடக்க நிலை வகுப்புகளுக்குப் பணியாற்றும் தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம். இதில், தொடக்க நிலை வகுப்புகளுக்கு பிளஸ் 2 தோ்ச்சி, உயா் நிலை வகுப்புகளுக்கு பட்டயப் படிப்பில் பெண்கள் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாதம் ரூ. 1,000 தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விருப்பம் உள்ள தன்னாா்வலா்கள் அருகில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 70109-38469, 94879-95128 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலிறுதியில் கேஸ்பா் ரூட் வெற்றி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 74.87 சதவீதம் வாக்குகள் பதிவு

மக்களவைத் தோ்தல்: நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்களிப்பு

கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

SCROLL FOR NEXT