திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 619 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 619 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,02,406ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 2,888 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 212 போ் வீடு திரும்பினா். அதேவேளையில், கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 98,487ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,031 போ் உயிரிழந்துள்ளனா்.