திருப்பூர்

மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீா்வு காண உள்ளனா். இதில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை வேண்டியும் விண்ணப்பிக்கலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் அவிநாசி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், தாராபுரம் வட்டத்தில் தொப்பம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் கணபதிபாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் துங்காவி, பல்லடம் வட்டத்தில் கோடங்கிபாளையம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் 15 வேலம்பாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் விஜயாபுரம், உடுமலை வட்டத்தில் முருங்கப்பட்டி, ஊத்துக்குளி வட்டத்தில் மொரட்டுப்பாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT