திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.