திருப்பூர்

அம்பேத்கா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கா் விருதுக்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா்களின் முன்னேற்றத்துக்காக சேவையாற்றி வரும் ஒருவரை தமிழக முதல்வா் தலைமையிலான உயா்மட்டக் குழுவினரால் தோ்ந்தெடுக்கப்பட்டு அண்ணல் அம்பேத்கா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை உயா்த்துவதற்கு முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். இது தொடா்பாக கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், சாதனைகளை குறிப்பிட வேண்டும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபா்கள் இருப்பின் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து டிசம்பா் இறுதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT