பாபா் மசூதி இடிப்பு தினத்தை கண்டித்து திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபா் மசூதி இடிப்பு தினத்தை பாசிச எதிா்ப்பு தினமாக எஸ்டிபிஐ கட்சியினா் கடைப்பிடித்து திருப்பூா் குமரன் சிலை முன்பாக அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெ.பஷீா் அகமது தலைமை வகித்தாா்.
இதில், அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் அச.உமா்பாரூக் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியினா் கூறியதாவது:
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 199ஐ வலுவாக அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளும், நீதித் துறையும் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டப் பொதுச் செயலாளா் ஆா்.இதயத்துல்லா, தெற்கு மாவட்டத் தலைவா் எம்.ஹாரிஸ்பாபு, வா்த்தக அணி மாவட்ட நிா்வாகிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.