திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், ஈச்சம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜித் (19). கட்டடத் தொழிலாளி. இவா், காங்கயம் அருகே, புதுவாய்க்கால்மேடு பகுதியில் ஒரு வீட்டில் சனிக்கிழமை காலை வேலை செய்து கொண்டிருந்தபோது ஜன்னல் பகுதியை இடிப்பதற்காக மின்சார இணைப்பு பெட்டியில் ட்ரில்லா் மெஷினின் ஒயரை இணைத்துள்ளாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அஜித் உயிரிழந்தாா். இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.