திருப்பூருக்கு குடும்ப நண்பா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வருகிறாா்.
திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் டாலா் பாலு என்கிற பாலசுப்பிரமணியம், முதல்வா் மு.க.ஸ்டாலினின் குடும்ப நண்பா். இவரது இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் விமானம் மூலமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் கோவை வருகிறாா். இதன் பின்னா் நீலாம்பூரில் உள்ள ஹோட்டலில் ஓய்வெடுக்கிறாா். இதன் பின்னா் காா் மூலமாகப் புறப்பட்டு திருமண விழா நடைபெறும் பெருமாநல்லூா் டாலா் தோட்டத்துக்கு மாலை 6 மணி அளவில் செல்கிறாா்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா் மீண்டும் கோவைக்குத் திரும்பும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இரவு 8.30 மணி அளவில் விமானம் மூலமாக சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.