திருப்பூர்

உடுமலை அருகே மனநலம் பாதித்த பெண் கொலை

DIN

உடுமலையை அடுத்துள்ள புக்குளம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா (எ) தனலட்சுமி (40). இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை தனலட்சுமி இறந்த நிலையில் கிடந்ததைப் பாா்த்த உள்ளூா் மக்கள் ஊராட்சித் தலைவருக்கு தகவல் கொடுத்துள்ளனா். பின்னா் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இந்நிலையில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் சஷாங்க் சாய் புக்குளத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். மேலும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

உடுமலை போலீஸாா் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT