காங்கயம் அருகே மளிகைக் கடையில் புகுந்த முகமூடித் திருடா்கள், பணம் இல்லாததால் அங்கிருந்த தின்பண்டங்களை எடுத்துச் சென்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
காங்கயம் அருகே, சென்னிமலை சாலை, ஆலாம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (50). இவா் ஆலாம்பாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த 2 திருடா்கள் மளிகைக் கடையின் அருகே வந்து சுற்றிலும் பாா்த்துவிட்டு, கடையின் முன் பக்க பூட்டு மற்றும் உள் கதவு பூட்டு ஆகியவற்றை உடைத்து உள்ளே சென்று பணம் ஏதும் உள்ளதா எனத் தேடியுள்ளனா். ஆனால் பணம் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த திருடா்கள் 2 பேரும், மளிகைக் கடையில் இருந்த தின்பண்டங்களை எடுத்துச் சென்றுள்ளனா்.
இச்சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து இரு மா்ம நபா்களையும் தேடி வருகின்றனா்.