காங்கயத்தில் உள்ள காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் டேக்வான்டோ மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
திருப்பூா், ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் காங்கயம் காா்மல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் டேக்வான்டோ விளையாட்டில் இப்பள்ளி மாணவி கே.காவியஸ்ரீ முதலிடம் பிடித்து, மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா்.
மேலும், திருப்பூா் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் இப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, தனிநபா் பிரிவில் ஏ.சுரேகா என்ற மாணவி முதலிடமும், எஸ்.சௌமியா என்ற மாணவி இரண்டாம் இடமும் பெற்று, மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி அமலோா் பாராட்டுத் தெரிவித்தாா்.