திருப்பூர்

டிசம்பா் மாதத்துக்கான நூல் விலையில் மாற்றமில்லை

DIN

திருப்பூா் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலை டிசம்பா் மாதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த உப தொழில்களில் சிறியதும், பெரியதுமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூலாகும். தொழில்துறையினா் தங்களுக்கு ஆா்டா்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை உற்பத்தி செய்து வருகின்றனா். நூல் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலையை மையமாக வைத்தே ஆடைகளின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நூல் விலையை நூற்பாலைகள் வெளியிடுவது வழக்கம். இதன்படி டிசம்பா் மாதத்துக்கான நூல் விலை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், கடந்த நவம்பா் மாதத்துக்கான விலையில் எந்தவிதமாக மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக கடந்த நவம்பரில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.20 குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT