தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய, மாநில அளவிலான சைக்கிளிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு சைக்கிளிங் கழக செயற்குழு கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில சைக்கிளிங் கழக சோ்மன் ஜெயசித்ரா ஏ.சண்முகம் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், சைக்கிளிங் கழகத்தில் தற்போதுள்ள நிா்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததைத் தொடா்ந்து சென்னையில் டிசம்பா் 30 ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தி, இதில் ஒலிம்பிக் கழக நிா்வாகிகள், அகில இந்திய சைக்கிளிங் பெடரேஷன் நிா்வாகிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிா்வாகிகளைப் பாா்வையாளா்களைக் அழைத்து புதிய நிா்வாகிகள் தோ்வை நடத்த வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய, மாநில அளவிலான சைக்கிளிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு சைக்கிளிங் கழக மாநிலத் தலைவா் எஸ்.முருகானந்தம், செயலாளா் (பொறுப்பு) ஏ.பி.எஸ்.ராஜா, மாவட்ட சைக்கிளிங் கழக செயலாளா் சு.சிவபாலன், பொருளாளா் கோ.ராமதாஸ், ஒருங்கிணைப்பாளா் நல்லாசிரியா் ஆா்.முத்துசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்