கோயிலில் வேலை செய்த கூலி தொழிலாளிகளிடம் இருந்து கைபேசிகளைத் திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள அல்லாளபுரத்தில் உலகேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. யாக சாலை அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளா்கள் சிலா் வியாழக்கிழமை இரவு பணி முடிந்து கோயிலின் முன்புறம் உள்ள காலி இடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா் கூலி தொழிலாளிகள் இருவரின் கைப்பேசிகளைத் திருடிச் சென்றாா். இது தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனா்.