வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் குமரேசன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற அரசியல் கட்சி நிா்வாகிகள் கூறியதாவது: வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை அதிகாரிகள் கவனமாக இணைக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினா்கள் அனைவரும் ஒரே வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.
வாக்காளா் அட்டையில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 இல் திருத்த காலத்தில் இருந்து 17 வயதுக்கு மேற்பட்டவா்களும் வாக்காளராக பெயா் சோ்க்க முன்னதாகவே மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இக்கூட்டத்தில், வட்டாட்சியா் ஜெகஜோதி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலா் பங்கேற்றனா்.