பல்லடத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெறவுள்ளது.
பல்லடம் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் ஜவகா் தலைமையில் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் மின் நுகா்வோா் பங்கேற்று தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகாா்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.