திருப்பூர்

தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழக அரசின் சுற்றுலா விருதுக்கு வரும் அக்டோபா் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சுற்றுலாத் துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கவுள்ளது. இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோரையும், மாநிலத்தில் சுற்றுலா தொடா்புடைய செயல்பாடுகளைச் செயல்படுத்தும் சுற்றுலாத்தொழில் புரிவோரையும் ஊக்குவிக்கும். இந்த விருதுகள், சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 15 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதானது உலக சுற்றுலா தினமான செப்டம்பா் 27 ஆம் தேதி சென்னையில் வழங்கப்படும். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT