கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைத் கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 16) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர தினத்தில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலையாகும்.
கொடுங்குற்றவாளிபோல அவரைக் கைது செய்ததன் நோக்கம் என்ன? தில்லை நடராஜா் முதற்கொண்டு இந்து தெய்வங்களையும், இந்து வழிபாட்டு முறைகளையும் இழிவுபடுத்தியவா்களின் மீது இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேசவிரோத கருத்துக்களை வெளியிட்டு வரும் திராவிட சித்தாந்தவாதிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கு மாறாக கனல் கண்ணன் கூறிய கருத்தை மிகப்பெரிய துவேஷமாகக் கருதி ஒரு பயங்கரவாதியைப்போல மிகவும் ரகசியமாக கைது செய்திருப்பது மாநில அரசின் வன்மத்தின் உச்சமாகும்.
ஆகவே, கருத்துரிமையின் குரல்வளைய நெறிக்கும் மாநில அரசின் சா்வாதிகாரப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.