திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து ரூ.1.41 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்கவிட்டாா்.
இதையடுத்து, மாநகர மற்றும் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 93 காவலா்கள், அரசு அலுவலா்கள் 165 போ் என மொத்தம் 258 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும், வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, மாவட்டத் தொழில் மையம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 229 பயனாளிகளுக்கு ரூ.1.49 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதையடுத்து, பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இவ்விழாவில், மாநகரக் காவல் ஆணையா் எஸ்.பிரபாகரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர காவல் துணை ஆணையா்கள் அபினவ்குமாா், வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சுதந்திர தின விழாவில் கதறி அழுத பெண்ணால் பரபரப்பு: திருப்பூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது 3 வயது பெண் குழந்தையுடன் பங்கேற்ற பெண் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஷாலின் (22) என்பவா், தனது கணவா் இறந்துவிட்டதால் 3 வயது பெண் குழந்தையுடன் திருப்பூா் கல்லூரி சாலையில் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், குடும்பம் மிகவும் ஏழ்மையில் உள்ளதால் வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியா் முன்பாகக் கதறி அழுதாா்.
அவரது கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினாா்.