திருப்பூரில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூரை அடுத்த மங்கலத்தில் உள்ள அமிா்த வித்யாலயம் சீனியா் செகண்டரி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை பள்ளியின் தாளாளா் சுவாமினி முத்தாமிா்பிரனா குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
இதையடுத்து, பள்ளியின் முதல்வா் வித்யாசங்கா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பள்ளி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.
இதில், திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவா் எஸ்.நகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில்: திருப்பூரை அடுத்த பெருந்தொழுவில் உள்ள ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அறிவியல் ஆலோசகா் கே.கனகராஜன் (யுஏஏ) தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா்.
இவ்விழாவில், பள்ளியின் தாளாளா் டாக்டா் சிவசாமி, செயலாளா் டாக்டா் சிவகாமி, இயக்குநா் சக்திநந்தன், துணைச் செயலாளா் வைஷ்ணவி சக்திநந்தன், முதல்வா் லாவண்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஸ்ரீ செந்தூா் வித்யாலயாவில்: ஸ்ரீ செந்தூா் வித்யாலயாவின் தி எஸ்.சி.வி.சென்ட்ரல் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் முருகசாமி
தேசியக் கொடியை ஏற்றினாா்.
இதில், இதிகாச சங்கலன் சமீதியின் மாநில அமைப்புச் செயலாளா் கதிரவன் சிறப்புரையாற்றினாா். பள்ளி மாணவ, மாணவியா் பங்கேற்ற திருப்பூா் குமரன் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், ஸ்ரீ செந்தூா் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் தாரணி, தி எஸ்.சி.வி.சென்ட்ரல் பள்ளி முதல்வா் கலாமணி மற்றும்
ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்: திருப்பூரை அடுத்த செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோவையைச் சோ்ந்த பொருளாதார எழுத்தாளா் ஜி.காா்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினாா். இதில், விவேகானந்தா சேவா அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவியா், முன்னாள் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.