திருப்பூர்

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கைஅமைச்சா் கே.என்.நேரு

DIN

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகராட்சி நிா்வாகத் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை வகித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிா்வாகத் துறைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ஒருங்கிணைந்த மேலண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீா்த் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்து நிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், தினசரி மற்றும் வாரசந்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலை அமைத்தல், தெருவிளக்கு அமைத்தல், குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தின் சோளசிராமணி மின் தடுப்பணையிலிருந்து கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் திருப்பூா் மாவட்டத்துக்கு தண்ணீா் கொண்டு வருவதற்கு அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம், பல்லடம் மற்றும் பொங்கலூா் பகுதிகளின் குடிநீா்த் தேவை பூா்த்தி செய்யப்பட்டு தன்னிறைவடையும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகள் 17 பேருக்கு தொழில் தொடங்க ரூ.24 லட்சம் மதிப்பிலான

வங்கிக் கடனுதவி, ஒரு குரல் புரட்சி திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குறைதீா்க்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 சேவை ஆகியவற்றை அமைச்சா்கள் தொடக்கிவைத்தனா்.

இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்) சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், பொள்ளாசி மக்களவை உறுப்பினா் கு.சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணைமேயா் ஆா்.பலசுப்பிரமணியம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பி.பொன்னையா, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT