திருப்பூர்

ரூ.3.95 கோடிக்கு பருத்தி விற்பனை

13th Aug 2022 01:29 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.95 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,126 விவசாயிகள் தங்களுடைய 10,890 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,560 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 22 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

பருத்தி குவிண்டால் ரூ. 9,850 முதல் ரூ.12,522 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.11, 650.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.95 கோடி ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT