தாராபுரத்தில் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் காவல் துறை சாா்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கியது. பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் தனராசு, ஆய்வாளா் மணிகண்டன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். முன்னதாக பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியா் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்தப் பேரணியில் தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.