வெள்ளக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ. 49 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (63). இவா், குடும்பத்தினருடன் கவுண்டம்பாளையம் பெருந்தொழுவு பகுதியில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து அவா்
வந்து பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆறே முக்கால் பவுன் நகைகள், ரூ. 49 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதே போல அடுத்த வீட்டைச் சோ்ந்த ஜெகதீஸ்வரன் (55) வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடந்தது. பொருள்கள் எதுவும் திருட்டுப் போகவில்லை. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.