திருப்பூர்

நொய்யல் ஆற்றங்கரையில் நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

DIN

திருப்பூா் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினா்.

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையானது சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன்னா் கட்டப்பட்டது. இந்த அணை கட்டும்போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்ததாம். அணை உடையும் நிலையில் இருந்ததால் நல்லம்மா என்ற சிறுமி உயிா் தியாகம் செய்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதால் நல்லம்மனின் வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை நல்லம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் பொங்கல் விழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கோயில் விழாக் குழுவினா் நொய்யல் ஆற்றங்கரையில் பச்சைக்குடில் அமைத்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். இதில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT