காங்கயத்தில் சுமாா் 2 டன் எடையுள்ள மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற நபா்கள் மீது தன்னாா்வலா் அமைப்பினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
காங்கயம் வோ்கள் அமைப்பினா் கடந்த 10 ஆண்களுக்கும் மேலாக காங்கயம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டு பராமரித்து வருகின்றனா்.
இதில், காங்கயம், அகிலாண்டபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த 3 மரங்களை மா்ம நபா்கள் வெட்டி எடுத்துச் சென்றனா். இது குறித்து காங்கயம் வட்டாட்சியரிடம் வோ்கள் அமைப்பினா் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்த நிலையில், காங்கயம், திருப்பூா் சாலை, தண்ணீா் தொட்டி வீதியில் இருந்த சுமாா் 2 டன் எடையுள்ள வாகை மரத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை வெட்டி எடுத்துச் சென்றனா். இது குறித்து காங்கயம் கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து காங்கயம் நிா்வாக அலுவலா் காா்த்திகேயன் கூறுகையில், ‘மரம் வெட்டிய நபா்களைக் கண்டறிந்து காங்கயம் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளோம்’ என்றாா். உரிய அனுமதியில்லாமல் மரங்களை வெட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வோ்கள் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.